இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
ரஜினி தற்போது தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்து வருகிறார். முதல் நாள் அவர்களிடையே பேசிய ரஜினி நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் இருக்கிறது. அப்படி வந்தால் இதய சுத்தியுடன் இருப்பேன். பணம் சம்பாதிக்க நினைக்கிறவங்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன் என்றார். இந்த நிலையில் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர், ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று தெரிவித்துள்ளார். ரஜினி பெங்களூருவில் பஸ் கண்டக்டராக இருந்தபோது டிரைவராக பணியாற்றியவர் ராஜ்பகதூர். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ரஜினி அவரது உறவினர் திருமணத்திற்காக கடந்த 8ம் தேதி பெங்களூர் வந்திருந்தார். அப்போது அருடன் நிறைய பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் தமிழ்நாட்டில் அரசியல் சூழ்நிலை பற்றி நிறைய வருத்தப்பட்டார். முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு எல்லாமே மாறிவிட்டது. தமிழகத்தின் எதிர்காலம் கவலை அளிப்பதாக இருக்கிறது. ஏழை மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். என்று கூறினார்.
நான் வேண்டுமானல் அரசியலில் இறங்கட்டுமா உன் கருத்து என்ன என்று கேட்டார். என் கருத்து மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தின் கருத்தே நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதுதான் என்று அவரிடம் சொன்னேன். ரஜினி ஒரு தீர்க்கான முடிவோடு இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். அவரது ரசிகர்கள் எல்லா கட்சியிலும் இருப்பதால் அவர் எந்த கட்சியிலும் சேர மாட்டார். தனிக்கட்சிதான் தொடங்குவார். என்கிறார் ராஜ்பகதூர்.