‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்ற அமைப்பு ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ் திரைப்பட வர்த்தக சபை என்ற புதிய அமைப்பு நேற்று துவக்கப்பட்டது. இதன் தலைவராக அபிராமி ராமநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தற்போது விஷால் தலைமையில் செயல்பட்டு வரும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போட்டி அணியாக துவக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அபிராமி ராமநாதன் கூறியதாவது:
இந்த சங்கம் வேறு எந்த சங்கத்திற்கு போட்டியாகவோ, யாருக்கும் எதிராகவோ தொடங்கப்படவில்லை. பல வருடங்களாக பலரின் சிந்தனையில் இருந்தது இப்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை 4 மாநிலங்களுக்காக செயல்படுகிறது. தமிழ் மொழிக்கென்று உருவாகும் பிரச்சினைகளில் கவனம் செலுத்த முடியவில்லை. எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்ளத்தான் இந்த சங்கத்தை உருவாக்கி உள்ளளோம். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு இடையே இணக்கத்தையும், நல்லுறவையும் ஏற்படுத்த இந்த அமைப்பு பாடுபடும். மற்ற அமைப்புகளில் செயல்பாட்டில் ஒரு போதும் தலையிடாது.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இருந்தாலும் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் தனித்தனியாக வர்த்தக சபைகள் தொடங்கி உள்ளார்கள். அதனால் தமிழ்நாட்டுக்கென்று நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இதன் தலைவராக நான் எல்லோராலும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். விரைவில் மற்ற நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். இதன் துவக்க விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்றார் அபிராமி ராமநாதன்.