‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சமூக வலைத்தளங்களில் உள்ளவர்களுக்கு 'அலசி ஆராய்வதற்கு' ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு 'டாபிக்' எப்படியாவது கிடைத்துவிடுகிறது. இன்று அவர்களுக்குக் கிடைத்திருக்கும் 'டாபிக்' அடுத்த சில நாட்களுக்கான 'ஆராய்ச்சி'யில் எந்த குறையையும் வைக்காது.
ரஜினிகாந்த் ரசிகர்களை பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்து, மொத்தமாக புகைப்படம் எடுக்கும் நிகழ்வு இன்று காலை சென்னையில் ஆரம்பமானது. முன்னதாக ரசிகர்கள் முன் பேசிய ரஜினிகாந்த் 21 வருடங்களுக்கு முந்தைய தன்னுடைய 'ரஜினி வாய்ஸ்' பற்றி மட்டுமல்லாமல், தன்னைப் பற்றிய ஊடகங்களின் விமர்சனங்கள், கருத்துக்கள் ஆகியவற்றிற்கும் பதிலளிக்கும் விதமாகப் பேசினார்.
வழக்கம் போலவே நான் அரசியலுக்கு வருவேனா என்பது ஆண்டவனின் கையில்தான் உள்ளது என்று தன் 'அரசியல் என்ட்ரி' பற்றி மீண்டும் சஸ்பென்ஸ் வைத்துவிட்டார்.
ரஜினிகாந்தின் இன்றைய பேச்சுக்கள் அனைத்துமே அரசியல் ரீதியாக பல விமர்சனங்களை ஆரம்பித்துவிட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் பதில் சொல்வதற்கு முன்பாக சமூக வலைத்தளவாதிகள் ரஜினியின் பேச்சுக்களுக்கு 'மீம்ஸ்களையும், கமெண்ட்டுகளையும்' பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரஜினியின் இன்றைய பரபரப்புப் பேச்சு என்ன தாக்கத்தைக் கொடுக்கப் போகிறது என்பது இனிமேல்தான் தெரிய வரும்.