‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஒரே கதையை 2 நிறுவனங்கள் படமாக தயாரிப்பது அந்த காலத்தில் வழக்கமாக இருந்தது. அது ஆரோக்கியமான போட்டியாகவும் இருந்தது. 1948ம் ஆண்டில் பிரபல தயாரிப்பாளர் ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஞானசவுந்தரி என்ற படத்தை தயாரித்தார். இது ஒரு கிறிஸ்தவ காதல் கதை. எம்.கே.ராதாவும், சுசீலா என்ற புதுமுக நடிகையும் நடித்தனர். முருகதாசா என்பவர் இயக்கினார். இதே நேரத்தில் சிட்டாடல் என்ற நிறுவனம் இதே கதையை ஞானசவுந்தரி என்ற பெயரில் தயாரித்தது. டி.ஆர்.மகாலிங்கம், எம்.வி.ராஜம்மா நடித்தனர். எப்.நாகூர் மற்றும் ஜோசப் தலியத் இயக்கினார்கள். ஒரே டைட்டில், ஒரே கதை இரண்டு படங்களாக தயாரானது.
ஒரு மாத இடைவெளியில் இரண்டு படங்களும் வெளிவந்தது. பிரமாண்ட படத் தயாரிப்பு நிறுவனமான ஜெமினி நிறுவனம் தயாரித்த படம் பெரும் தோல்வி அடைந்தது. சிறிய நிறுவனமான சிட்டாடல் என்ற நிறுவனம் தயாரித்த படம் வெற்றி பெற்றது. இந்த தோல்வி தயாரிப்பாளர் வாசனை அதிர்ச்சி அடைய வைத்தது.
சிட்டாடல் ஞானசவுந்தரியின் வெற்றிக்கு காரணம் கிறிஸ்தவ காதல் கதையை கிறிஸ்தவர்களே இயக்கியதால் அது நேட்டிவிட்டியாக இருந்தது. ஜெமினி நிறுவனம் தயாரித்த படத்தில் நாயகியின் நெற்றில் சிலுவை திலகமிட்டது உள்பட கிறிஸ்தவ கலாச்சாரத்தில் இல்லாத விஷயங்கள் சேர்க்கப்பட்டது. அதோடு சிட்டாடல் படத்தில் நடித்த டி.ஆர்.மகாலிங்கம் அப்போது சூப்பர் ஸ்டாராக இருந்தார்.
ஜெமினியின் ஞான சவுந்தரி தோல்வி அடைந்தாலும் வாசன் மீதுள்ள மரியாதை காரணமாக ஜெமினி ஞானசவுந்தரியை வெற்றி படம் மாதிரி காட்டிக் கொள்ள தியேட்டர்காரர்கள் முன்வந்தார்கள். ஆனால் தோல்வியை ஒப்புக் கொண்ட எஸ்.எஸ்.வாசன் இனி எந்தக் காலத்திலும் இந்தப் படம் எந்த தியேட்டரிலும் ஓடக்கூடாது என்று படப் பெட்டியை தீயிட்டு கொளுத்த உத்தரவிட்டார்.