போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
இந்திய சினிமாவில் மூன்று கான் நடிகர்கள் முக்கியமான வசூல் நடிகர்கள், சல்மான் கான், அமீர் கான், ஷாரூக் கான். இவர்கள் மூவரின் படங்கள்தான் பாலிவுட்டில் அதிக வசூலைப் பெறும் படங்களாக இதுவரை இருந்து வந்தன. 100 கோடி கிளப் என்று ஆரம்பமாகி இப்போது 700 கோடி வரை வந்து நிற்கிறது இவர்களின் படங்கள். யாருடைய படம் சீக்கிரம் 100 கோடியைத் தொடுகிறது என்பதில் இவர்களுக்குள் கடும் போட்டி. அவர்களுக்குள்ளான போட்டி எப்படி என்பதை பாலிவுட்டே அறியும். எப்படியாவது தங்கள் படங்கள் மாபெரும் வெற்றி பெறுவதோடு, வசூலிலும் சாதனை படைக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.
ஷாரூக் கான், சல்மான் கான் கமர்ஷியல் ரீதியான படங்களில் அப்படிப்பட்ட சாதனைகளைப் படைத்திருக்க, அமீர்கான் மட்டும் பிகே, தங்கல் என வித்தியாசமான படங்களால் சமீபகாலமாக சாதனைகளைப் படைத்து வருகிறார்.
பாகுபலி 2 படம் வெளிவருவதற்கு முன்பே பாலிவுட்டின் பல பிரபலங்கள் அந்தப் படத்திற்கு ஆதரவாக பேச மறுக்கிறார்கள் என்று செய்தி வெளியானது. படம் வெளிவந்த பின் பலர் மௌனம் காப்பதைப் பார்க்கும் போது அது உண்மைதான் என்று எண்ணத் தோன்றுகிறது.
தங்களது படங்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவிடும் ஷாரூக்கான், அமீர்கான், சல்மான் கான் ஆகியோர் இதுவரை பாகுபலி 2 படத்தின் வரவேற்பு பற்றியோ, வசூல் பற்றியோ வாயைத் திறக்காமல் மௌனம் காத்து வருகிறார்கள். தங்கள் படங்களின் வசூல் சாதனை பாகுபலி 2 படத்தால் பறி போகிறதே என்ற கவலையா என்று தெரியவில்லை. அவர்கள் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களில் எதைப்பற்றியும் பதிவிடும் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூட பாகுபலி 2 பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.
மகேஷ்பட், சேகர் கபூர், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே பாகுபலி 2 பற்றி பாராட்டியிருக்கிறார்கள். இந்திய அளவில் ஒரு சினிமா, அதுவும் தென்னிந்திய சினிமா வரவேற்பையும், வசூல் சாதனை புரிவதையும் அவர்களும் பாராட்டினால் குறைந்தா போய்விடுவார்கள்.