இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என, பின்னணி பாடகி, சுசித்ரா வேதனை தெரிவித்துள்ளார். தனுஷ், த்ரிஷா உள்ளிட்ட தமிழ் திரை நட்சத்திரங்களின் ரகசிய படங்களை, டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர், சினிமா பின்னணி பாடகி சுசித்ரா. இதற்கு, அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதே காரணமாக கூறப்பட்டது. பின், அவரது டுவிட்டர் பக்கம், முற்றிலுமாக நீக்கப்பட்டது.
இந்நிலையில், சுசித்ரா கூறியதாவது: இரண்டு மாதமாக, அனைவரையும் சிரமத்துக்கு ஆளாக்கிய வேதனையில், இருக்கிறேன்; நடந்ததை எண்ணி வருத்தப்படுகிறேன். என் பெயரில் வெளியான படம் மற்றும் தகவல்களுக்கு, நான் பொறுப்பல்ல. என்றாலும், என்னால் ஆறுதல் பெற முடியவில்லை. அந்த படங்களை நான் வெளியிடவில்லை; யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
என் மனநிலை குறித்து, என் கணவர் கூறியதை சரி செய்து வருகிறேன். இப்போது உடல் நலம் பரவாயில்லை. என்னால் பாதித்தவர்களிடம் மன்னிப்பு வேண்டுகிறேன். எனக்கு எதிரிகள் யாரும் இல்லை; யார் நட்பையும் இழக்க விரும்பவில்லை. இந்த நிலை, என் எதிரிக்கு கூட வரக்கூடாது. மனநல பாதிப்பில் இருந்து, மீண்டு வர ஆறு வாரங்களானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.