ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன், புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் இரும்புத்திரை ஆகிய படங்களில் நடித்து வரும் விஷால், புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.
இயக்குநர் பொன்ராமிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கடேசன் இயக்கவிருக்கும் இந்தப்படத்தில் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கவிருக்கிறார் விஷால். அவருக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கவிருக்கின்றனர். இந்தப் படத்துக்கு நாளை நமதே என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். நடிப்பில் 1975ல் வெளிவந்த படம் 'நாளை நமதே'. அதன் அடிப்படையில் எம்.ஜி.ஆர். படத்தின் தலைப்பில் விஷால் நடிப்பதாக பப்ளிசிட்டியை தொடங்கிவிட்டனர். நாளை நமதே என்ற தலைப்பில் மலையாளப்பட இயக்குநர் வினயன் இயக்கத்தில் 2009-ல் ஒரு படம் வெளியானது. அந்த தகவலை மறைத்துவிட்டு, எம்.ஜி.ஆர். பட தலைப்பில் விஷால் நடிப்பதாக கூறியுள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க, ஏற்கனவே வெளியான படத்தின் தலைப்பை சூட்டினால், அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் ஒரு விதியை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. தற்போது விஷால் நடிக்கும் படத்துக்கு மூன்றாவது முறையாக நாளை நமதே என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளதால், யாரிடம் அனுமதி வாங்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.