‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ராம்கோபால் வர்மாவையும், சர்ச்சையையும் பிரிக்கவே முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே பல முக்கிய நிகழ்வுகளைப் பற்றி தன்னுடைய டிவிட்டரில் அவர் கருத்துக்களைப் பதிவிட்டுக் கொண்டிருப்பார்.
பிரபல தெலுங்குத் திரைப்பட இயக்குனரும், நடிகருமான கே. விஸ்வநாத்திற்கு நேற்று தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. தென்னிந்தியத் திரையுலகத்தினர் அவருக்குத் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்க, ராம்கோபால் வர்மா மட்டும் மாறுபட்ட கருத்தை பதிவிட்டார்.
“தாதா சாகேப் பால்கேவை விட கே. விஸ்வநாத் மிகச் சிறந்த இயக்குனர். தாதா சாகேப் பால்கே விருதை கே. விஸ்வநாத்திற்கு அளித்ததற்குப் பதிலாக கே. விஸ்வநாத் விருதை பால்கேவுக்கு வழங்கியிருக்கலாம். எனக்கு பால்கே மீது மரியாதை இல்லை என்று அர்த்தமில்லை. பால்கேவின் படங்களை விட கரண் ஜோஹர் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பால்கே 95 படங்களை இயக்கியிருக்கிறார். ஆனால், ஒரு படம் கூட கரண் ஜோஹரின் படங்கள் அளவிற்கு இருந்தது இல்லை. பழையனவற்றைப் பற்றிப் பேசுவதை விட புதியவற்றிற்கு அங்கீகாரம் அளிக்கலாம்,” எனப் பதிவிட்டுள்ளார்.
வழக்கம் போல ராம்கோபால் வர்மாவின் இந்தக் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.