நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் |
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில், 1950-60களில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை 'மகாநதி' என்ற பெயரிலேயே படமாக்கவுள்ளனர். நாக் அஷ்வின் இயக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. படத்தில் நடிகையர் திலகமாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது.
இப்போது படத்தின் கதாநாயகனாக ஜெமினி கணேசன் கேரக்டரில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.. ஓகே கண்மணி மூலமாக தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் துல்கர் சல்மானுக்கு நல்ல அறிமுகம் கிடைத்துள்ளதாலும் இன்றைய இளம் நடிகர்களில் ஜெமினியின் ரோலுக்கு பொருத்தமானவராக இவர் இருப்பதாலும் துல்கர் சல்மானை இந்த கேரக்டருக்கு தேர்வு செய்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.. இருந்தாலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.