கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் |
'பாகுபலி 2' திரைப்படம் இன்னும் சில நாட்களில் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாகவும், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டும் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாகமே சுமார் 700 கோடி வரை வசூலித்த நிலையில் இரண்டாம் பாகம் இன்னும் அதிகமாக 1000 கோடி வரை வசூலிக்கும் என திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர்.
இந்த 1000 கோடி எதிர்பார்ப்பு பாலிவுட்டில் பொறாமையை ஏற்படுத்தியிருக்கிறதாம். இந்தியத் திரையுலகம் என்றாலே ஹிந்தித் திரையுலகம்தான் என்று இருக்க வேண்டும் என்பதுதான் பாலிவுட்டில் பலரது நினைப்பு. ஹிந்திப் படங்கள் தவிர வேறு எந்த மொழிப் படங்களும் இந்திய அளவில் சாதனை படைக்கக் கூடாது என்பதுதான் அவர்களது எண்ணமாக இருக்கிறது.
'பாகுபலி 2' படத்தைப் பற்றி பெரிதாக எந்தப் பாராட்டையும் தெரிவிக்கக் கூடாது என பாலிவுட்டின் முக்கிய இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் முடிவு செய்துள்ளளதாக பாலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்தியாவிலிருந்து வரும் நடிகர்கள் மீது எப்போதுமே பாலிவுட்டினர் பொறாமையாக இருப்பது வழக்கம். கமல்ஹாசனைக் கூட அங்கிருந்து விரட்டியவர்கள்தானே அவர்கள். கதாநாயகிகளுக்கும், ஒளிப்பதிவாளர்களுக்கும் மட்டுமே பாலிவுட்டின் கதவைத் திறப்பார்கள். மற்றவர்களுக்கு மூடி விடுவார்கள். இது காலம் காலகமாக இருந்து வரும் ஒன்றுதான் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
பாலிவுட்டினரின் பொறாமையையும் மீறி 'பாகுபலி 2' படம் 1000 கோடி வசூல் சாதனையைப் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.