‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விஜய் சேதுபதி தவிர மூன்றாம்தட்டு ஹீரோக்களின் படங்களாக நடித்து வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் வடசென்னை படத்தில் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவநட்சத்திரம் படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த படங்கள் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், வடசென்னை படத்தைப்பொறுத்தவரை குப்பத்து பெண்ணாக நடிக்கிறேன். அந்த மாதிரியான வேடங்களில் ஏற்கனவே நான் நடித்திருப்பதால், இந்த படத்தில் இன்னும் மாறுபட்ட பர்பாமென்ஸை கொடுத்து வருகிறேன். அதோடு, தனுசுடன் நடிக்க வேண்டும் என்கிற எனது நீண்டநாள் கனவு தற்போது நனவாகியிருக்கிறது.
இதையடுத்து, துருவநட்சத்திரம் படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தைப்பொறுத்தவரை விக்ரம் நடிப்பில் கெளதம்மேனன் இயக்கும் படம் என்பது மட்டும்தான் எனக்கு தெரியும். அந்த படத்தில் எனக்கு எந்தமாதிரியான கதாபாத்திரம் என்பதை இன்னும் டைரக்டர் சொல்லவில்லை. கெளதம்மேனனைப் பொறுத்த வரை ஸ்பாட்டிற்கு போன பிறகுதான் எந்தமாதிரியான ரோல் என்பதை சொல்வார் என்று சில நடிகைகள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால், அதைப்பற்றி நான் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
மேலும், இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ரித்துவர்மாவும் இருக்கிறார். எங்களில் விக்ரமிற்கு ஜோடியாக வருவது அவரா இல்லை நான் என்பதும் எனக்கு தெரியாது. அதோடு, நான் எப்போதுமே பர்பாமென்ஸ் கேரக்டர்களில் நடிப்பதில்தான் ஆர்வமாக இருக்கிறேன். அதனால் ஹீரோவுடன் டூயட் பாடும் வேடம்தான் வேண்டும் என்று டைரக்டர்களிடம் சொல்வதில்லை. அதனால் ஒருவேளை விக்ரமிற்கு ஜோடி நானில்லை என்றாலும் நான் பீல் பண்ண மாட்டேன். அதேசமயம், கண்டிப்பாக கெளதம்மேனன் எனக்கு நல்ல அழுத்தமான கேரக்டர் வைத்திருப்பார் என்பதை மட்டும் உறுதியாக நம்புகிறேன் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.