‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மதுரை மண்வாசனை கதையில் அமீர் இயக்கி வரும் படம் சந்தனத்தேவன். ஜல்லிக்கட்டு கதையில் உருவாகி வரும் இந்தப்படத்தில் ஆர்யா, அமீர், சத்யா, அதிதிமேனன் உள்பட பலர் நடிக்கிறார்கள். 1980-களில் நடக்கும் கதையில் தயாராகி வரும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மே 1-ந்தேதி தொடங்குகிறது.
இப்படத்தில் தனது வேடம் குறித்து அதிதிமேனன் கூறுகையில், சந்தனத்தேவன் படத்தில் நான் சத்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். நிஜவாழ்க்கையில் பாவாடை தாவணியே அணியாத நான், இந்த படத்திற்காக படம் முழுக்க அந்த கெட்டப்பில் நடிக்கிறேன். எனது நடை உடை பாவணை அனைத்துமே மதுரைப் பெண்களைப் போன்று இருக்க வேண்டும் என்பதால், முதல்கட்ட படப்பிடிப்புக்கு நான் சென்றபோது அங்கு வந்த சில மதுரைக்கார பெண்களுடன் என்னை பழக வைத்தார் அமீர். அப்படி அவர்களிடம் பழகியபோது அவர்கள் பேசுவது, பழகுவதை என ஒவ்வொரு விசயத்தையும் உள்வாங்கி அதை எனது நடிப்பில் பிரதிபலித்தேன்.
அந்த வகையில், என்னை சந்தனத்தேவனில் பக்கா மதுரைக்கார பெண்ணாகவே மாற்றியிருக்கிறார் அமீர். அதோடு, ரொமான்ஸ் மட்டுமே பண்ணக்கூடிய நாயகியாக இல்லாமல், மாறுபட்ட பர்பாமென்ஸை வெளிப்படுத்தும் வேடத்தில் நடிக்கிறேன். இன்னும்15 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டால், என் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விடும்.
இந்த நிலையில், தமிழ், மலையாளத்தில் இருந்து சில படவாய்ப்புகள் வருகிறது. ஆனால் சந்தனத்தேவனில் நடித்து முடித்த பிறகுதான் மற்ற படங்களில் நடிக்கும் முடிவில் இருக்கிறேன். அதோடு, சந்தனதேவன் படம் பார்த்தால் என்னை நம்பி எந்த மாதிரியான வேடங்களும் தருவார்கள். அந்த அளவுக்கு வெயிட்டான வேடம் தந்திருக்கிறார் அமீர் என்கிறார் அதிதிமேனன்.