தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
பிரபல கன்னட நடிகை ரம்யா அரசியலில் நுழைந்து பார்லிமென்ட் உறுப்பினராகவும் ஆனார். கடந்த ஆண்டு மீடியாக்களுக்கு பேட்டியளித்த ரம்யா, தான் பாகிஸ்தான் சென்று வந்ததாகவும், அங்குள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள் என்றும் கூறினார்.
ரம்யாவின் இந்த கருத்து தேசத்துக்கு விரோதமானது என்று வக்கில் விட்டல் கவுடா என்பவர் குடகு மாவட்டம் சோம்வார்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரம்யா தேசத்துக்கு துரோகமான கருத்துக்களை கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் மீது தேசதுரோக வழக்கு தொடர முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை அறிந்ததும் ரம்யா ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.