‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டோரா. இந்தப் படத்தில் நயன்தாராதான் ஹீரோ, ஹீரோயின் எல்லாம். ஆனால் அவரை எதிர்ப்பது மூன்று டெரர் வில்லன்கள். அந்த வில்லன்களில் ஒருவர் ஷான். பவன் சர்மா என்ற வடநாட்டு வில்லன் கேரக்டரில் நடித்த ஷான், பொள்ளாச்சி என்ஜினீயர். தொடர்ந்து வில்லனாக நடித்து வரும் ஷான் கூறியதாவது:
இஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு நடிப்பதற்காக முயற்சி செய்தேன். இயக்குனர் மித்ரன் ஜவஹரை சந்தித்தேன். மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் இஷா தல்வார் காதலனாக அறிமுகப்படுத்தினார். அந்த படம் வெளிவருவதற்கு முன்பே தங்கமகன் படத்தில் எமி ஜாக்சனின் பாய்பிரண்ட் வேடத்தில் நடித்தேன் அந்த கேரக்டர் என்னை பிரபலமாக்கியது. அடுத்து கோ-2 படத்தில் வில்லன் வேடம். டோரா படத்தில் முக்கிய வில்லனாக நடித்தேன்.
பெரிய ஹீரோயின் நயன்தாரா. அவருக்கே நான் வில்லனாக நடித்தது எனக்கு மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்தி விட்டது. படப்பிடிப்பில் நயன்தாரா "நல்லா நடிக்கிறீங், அசல் வில்லனாக பயமுறுத்துறீங்க. இதையே பாலோ பண்ணுங்க" என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் தொடர்ந்து வில்லனாகவே நடிக்க முடிவு செய்தேன்.
தற்போது சஜோ சுந்தர் இயக்கும் புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் படம் தயாராகிறது. இன்னும் பெயர் வைக்கவில்லை. கடைசி வரை வில்லனாக நடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது என் ஆசை என்கிறார் ஷான்.