‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'மொழி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் தனி பெயரைப் பெற்றவர் இயக்குனர் ராதாமோகன். அந்தப் படத்திற்குப் பின் அவர் இயக்கிய 'அபியும் நானும்' படம் மட்டுமே ஒரு சிறந்த படமாக அமைந்தது. அதன் பின் அவர் இயக்கிய 'பயணம், கௌரவம், உப்பு கருவாடு' ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை எற்படுத்தவில்லை. தற்போது அருள்நிதி நாயகனாக நடிக்கும் 'பிருந்தாவனம்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.
'பிருந்தாவனம்' படத்தில் நாயகனாக நடித்து வரும் அருள் நிதி 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்ற படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படங்களுக்குப் பிறகு மீண்டும் ராதாமோகன் இயக்கத்தில் நடிக்கப் போவதாக அருள்நிதி அறிவித்துள்ளார். அது பற்றிய விவரத்தை விரைவில் வெளியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அருள்நிதி கடந்த ஏழு வருடங்களில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் முன்னணி நாயகன் என்ற பட்டியலில் கூட வராமலிருக்கிறார். ராதாமோகன் இயக்கத்தில் வெளிவர உள்ள 'பிருந்தாவனம்' படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார். இந்தப் படமாவது அவருக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். 'டிமான்டி காலனி' படம் வெற்றி பெற்றாலும் அதற்குப் பிறகு அவருக்கு அதிகமான படங்கள் வராதது ஆச்சரியமாகத்தான் உள்ளது.