ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
ஆர்யாவின் தம்பி சத்யா பெங்களூரில் ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார். அவரிடம் நண்பர்கள் சிலர் சினிமா ஆசையை தூண்டி விட, வேலையை ரிசைன் பண்ணி விட்டு, சென்னைக்கு வந்து என்னையும் நடிகராக்க வேண்டும் என்று அண்ணன் ஆர்யாவிடம் மல்லுக்கு நின்றார். அதன்பிறகுதான் புத்தகம் என்ற படத்தில் சத்யாவை அறிமுகம் செய்தார் ஆர்யா. ஆனால் அந்த படம் வெற்றிபெறாததால் அடுத்தபடியாக சத்யாவுக்கு புதிய படம் புக்காகவில்லை. அதனால் அமரகாவியம் என்ற படத்தை தானே தயாரித்தார் ஆர்யா. ஆனால் அந்த படமும் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. அதன்பிறகு நடித்த எட்டுத்திக்கும் மதயானையும் சத்யாவுக்கு கை கொடுக்கவில்லை. அதனால் அவர் அடுத்தபடியாக கமிட்டான படங்கள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், தற்போது அமீர் இயக்கும் சந்தனத்தேவன் படம் மூலம் மீண்டும் நாயகனாக என்ட்ரியாகியுள்ளார் சத்யா. இந்த படத்தில் ஆர்யாவும் இன்னொரு நாயகன். என்றாலும் சத்யாவை தூக்கி நிறுத்த வேண்டும் என்பதற்காக கதையில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். மேலும், சந்தனத்தேவன் படப்பிடிப்பு தளத்தில் எந்நேரமும் கலகலப்பாக காணப்படும் ஆர்யா, தனது தம்பி சத்யாவுடன் ரொம்ப பிரண்ட்லியாக பழகுகிறாராம். இதே படத்தில் நடிக் கும் அதிதிமேனன், கிருத்திகா ஆகியோரை அண்ணன் தம்பி என இருவரும் சேர்ந்தே கலாய்க்கிறார்களாம். இப்படி அண்ணனும், தம்பியும் சேர்ந்து கொண்டு சில சமயங்களில் ஓவராக கிண்டல் செய்வதால் அதை தாக்குப்பிடிக்க முடியாமல் அம்மணிகள் இருவரும் தெறித்து ஓடுகிறார்களாம். ஆக, இதுவரை மற்ற நடிகர்களை கூட்டணி சேர்த்து கலாய்த்து வந்த ஆர்யா, இப்போது சொந்த தம்பி சத்யாவையே தனது கலாய்ப்பு கூட்டணியில் சேர்த்துவிட்டார் என்கிறார்கள்.