‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷைத் தொடர்ந்து மானாட மயிலாட நிகழ்ச்சியில் புகழ் பெற்று சினிமாவுக்கு வந்திருப்பவர் ஆலியா மானஷா. சமீபத்தில் திரைக்கு வந்த ஜூலியும் 4 பேரும் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதையடுத்து வர்மாவுக்கு ஜோடியாக ஒரு மலையாள படத்தில் நடித்து வரும் ஆலியா மானஷாவுக்கு தமிழ் சினிமாவில் சிம்பு, சித்தார்த், கெளதம் கார்த்திக் ஆகியோர் பிடித்தமான நடிகர்களாம். அதனால் அவர்களுடன் நடிக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வமாக இருப்பதாக சொல்கிறார்.
இதுபற்றி ஆலியா மானஷா கூறுகையில், மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆடிய நடனம்தான் என்னை சினிமாவுக்குள் கொண்டு வந்தது. ஆனபோதும், நான் நாயகியாக நடித்த ஜூலியும் 4 பேரும் படத்தில் எனக்கு நடனமாட போதிய வாய்ப்பு இல்லை. ஒரு மான்டேஜ் மாதிரிதான் நடனமாட ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தது. அதைகூட நான் டைரக்டரிடம் கேட்டு வாங்கினேன்.
மேலும், தமிழ் சினிமாவில் எல்லா ஹீரோக்களும் எனக்கு பிடித்தமானவர்கள்தான் என்றாலும், சிம்பு, சித்தார்த், கெளதம் கார்த்திக் ஆகியோர் அதிகம் பிடித்தமானவர்கள். இவர்கள் மாதிரி இளவட்ட நடிகர்களுடன் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். அதேபோல், தமன்னா போன்று கிளாமராக நடிப்பேன். ஆபாச எல்லையை தொடாமல் அழகியலுடன் கிளாமரை வெளிப்படுத்துவேன் என்று கூறும் ஆலியா மானஷாவுக்கு இளைஞர்களின் கனவுக்கன்னியாக வேண்டும் என்பதுதான் முதல் நோக்கமாம். அதனால் அதை மனதில் கொண்டு அதற் கேற்ற கதைகளை செலக்ட் பண்ணி நடிக்கப்போகிறேன் என்கிறார்.