‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பத்து வருடங்களுக்கு முன்பு எஜமான் படத்தை இயக்கிய ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் கற்க கசடற என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானவர் விக்ராந்த். நடிகர் விஜய்யின் சித்தி மகனான இவர் அதன்பிறகு பல படங்களில் நடித்தார். ஆனபோதும், படங்கள் வெற்றி பெறாததால் மார்க்கெட்டில் பின்தங்கியிருக்கிறார் அவர். ஆனால், விஷால் நடித்த பாண்டியநாடு, கெத்து, கவண் போன்ற படங்களில் அவர் நடித்த கேரக்டர்கள் பேசப்பட்டதால் தற்போது மீண்டும் ஹீரோவாகியிருக்கிறார் விக்ராந்த்.
அந்த வகையில், வெண்ணிலா கபடிக்குழு-2 படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விக்ராந்த், சமுத்திரகனியின் தொண்டன் படத்தில் இளவட்ட நாயகனாக நடித் திருக்கிறார். சுசீந்திரனின் அறம் செய்து பழகு படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்து வருகிறார். ஆக, தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் விக்ராந்த். அதனால், இந்த படங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் கமர்சியல் வட்டத்திற்குள் விக்ராந்த் வந்து விடுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தொண்டன் படத்தின் ஆடியோ விழாவில் பேசிய டைரக்டர் பாலா, நான் சொல்வதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் இரண்டு வருடங்களில் தமிழ் சினிமாவில் கண்டிப்பாக பெரிய ஸ்டாராக வருவார் விக்ராந்த் என்று கூறினார். அதைக்கேட்டு விழா மேடையிலேயே ஆனந்த கண்ணீர் வடித்தார் விக்ராந்த்.