ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
நடிகர் சங்கத்தில் ஒரு மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால் செயலாளர் பதவி வகித்து வருகிறார். அதையடுத்து தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டியிட்டு தலைவராகிவிட்டார். இந்நிலையில், சமீபத்தில் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டது.
அதோடு விஷாலும், கார்த்தியும் சேர்ந்து ஆளுக்கு 5 கோடி கொடுப்பதாக சொன்னவர்கள், அதற்காக புதிய படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படி தாங்கள் நடித்து கிடைக்கும் சம்பளத்தை நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக கொடுக்கிறார்கள்.
அவர்களின் இந்த செயலைப்பார்த்து, ஆரம்பத்தில் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட இப்போது விஷால் அணியினரை பாராட்டி வருகின்றனர். அதே போல், தயாரிப்பாளர் சங்கத்திலும் நல்ல விசயங்களை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். இதனால் படங்களில் நடித்துக்கொண்டே நடிகர், தயாரிப்பாளர் சங்க பணிகளிலும் தீவிரமடைந்திருக்கிறார் விஷால்.
இந்நிலையில், அவர் கலந்து கொள்ளும் சினிமா நிகழ்ச்சிகளில் அவரை மேடைக்கு பேச அழைக்கும்போது நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் அவர்களை பேச அழைக்கிறோம் என்கிறார்கள். அதைக்கேட்டு விஷால் சந்தோசப்படவில்லை.
மாறாக, இப்படி சொல்வதினால் எனக்கு பயமாக இருக்கிறது. முன்பெல்லாம் நடிகர் விஷால் என்பார்கள். சந்தோசமாக இருந்தது. ஆனால் இப்போது இந்த பொறுப்புகளை சொல்லி அழைக்கும் போது என்னையுமறியாமல் ஒருவித பயம் ஏற்படுகிறது என்கிறார் விஷால்..