தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
தமிழ்த் திரையுலகில் 'தர்மத்தின் தலைவன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் எண்ணற்ற படங்களில் நடித்து 90களின் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர். கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் 'ஓ அந்த நாட்கள்' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
அடுத்து, மீண்டும் தெலுங்குப் படத்தில் இன்று முதல் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குஷ்பு தெலுங்கு சினிமாவில் நடித்து சுமார் 10 வருடங்கள் ஆகிவிட்டது.
“த்ரிவிக்ரம், பவன்கல்யாண் படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொள்கிறேன். பள்ளிக்குச் செல்லும் முதல் நாள் போல் உள்ளது. பல விஷயங்களைக் கற்க வேண்டும்,” என்று குஷ்பு தெரிவித்துள்ளார். குஷ்பு மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்க வந்திருப்பதை தெலுங்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரவேற்றுள்ளார்கள்.