‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கோடை விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. தமிழ்ப் புத்தாண்டு முதல் கோடை சினிமா கொண்டாட்டமும் ஆரம்பமாகிவிடும். இந்த வாரத்திலிருந்து மே மாதம் முடிய வெளிவரும் படங்கள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் வசூல் ரீதியாக தப்பித்து விடும். வெளியூர்களுக்கு சுற்றுலா செல்ல முடியாதவர்கள் உள்ளூரில் திரைப்படங்களுக்குப் போக ஆரம்பித்துவிடுவார்கள்.
இந்த வருடத் தமிழ்ப் புத்தாண்டில் மூன்றே மூன்று படங்கள்தான் வெளியாக உள்ளன. ஆனால், மூன்று படங்களுக்கும் இடையில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. 'ப.பாண்டி, கடம்பன், சிவலிங்கா' ஆகிய மூன்று படங்கள் புத்தாண்டை முன்னிட்டு வெளிவருகின்றன.
தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் 'ப.பாண்டி' படத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வயதானவர்களை இளைஞர்கள் உதாசீனப்படுத்தக் கூடாது என்பதை ஜாலியாக சொல்லியிருக்கும் படம் இது.
'மஞ்சப் பை' படத்தை இயக்கிய ராகவா இயக்கத்தில் ஆர்யா, கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடிக்கும் படம் 'கடம்பன்'. யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மலைவாழ் மக்களின் பிரச்சனைகளைப் பற்றி சொல்லும் படம். இந்தப் படமாவது ஆர்யாவுக்கு மீண்டும் வெற்றியைத் தர வேண்டும்.
'சந்திரமுகி' என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர் பி.வாசு, ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இயக்கியிருக்கும் படம் 'சிவலிங்கா'. ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைத்திருக்கிறார். கன்னடத்தில் 80 தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடி கன்னடத் திரையுலக வரலாற்றில் அதிக வசூலைப் பெற்ற மூன்றாவது படம் என்ற பெருமையைப் பெற்ற படம். ஒரு பழி வாங்கும் பேய்க் கதைதான். பேய்ப் படங்கள்தான் ராகவா லாரன்ஸுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளன. அது இந்தப் படத்திலும் தொடருமா எனப் பார்க்க வேண்டும்.
இந்த மூன்று படங்களுமே திரையுலகினர் மத்தியிலும், வினியோகஸ்தர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. மூன்று படங்களுமே வெற்றி பெற்று விடும் என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.