ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
சந்திரமுகி படத்தில் ரஜினி, பிரபு போன்ற முன்னணி நடிகர்கள் நடித்தபோதும் ஜோதிகாவே பிரதான வேடத்தில் நடித்திருந்தார். அந்த படம் வெளியானபோது ஜோதிகாவின் பர்பாமென்ஸ் கோலிவுட் வட்டாரத்தில் பெரிய டாக்காக இருந்தது. அந்த அளவுக்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஜோதிகா. இந்நிலையில், சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமான சிவலிங்காவில் முதல் பாகத்தில் ஜோதிகா நடித்தது போன்ற முக்கிய வேடத்தில் இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங்கை நடிக்க வைத்திருக்கிறார் பி.வாசு.
அதோடு, கன்னடத்தில் வெளியான சிவலிங்கா படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தபோது, ஹீரோவாக லாரன்சை முடிவெடுத்துவிட்ட நிலையில், ஹீரோயினியாக யாரை நடிக்க வைக்கலாம் என்பது சவாலாக இருந்தது. ஆனால் அப்போதுதான் இறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங் என் மனதில் வந்தார். அவரது திமிறு கலந்த ரவுடித்தனம் மனதில் ஓடியபோது, சிவலிங்காவுக்கு அவர்தான் சரியான நாயகி என்று முடிவு செய்தேன் என்று சொல்லும் பி.வாசு, சிவலிங்காவில் ஒவ்வொரு காட்சியையும் உள்வாங்கி எதிர்பார்த் ததை விடவும் அருமையாக நடித்துக் கொடுத்தார் ரித்திகா சிங் என்கிறார்.
மேலும், சில காட்சிகளில், அவரது நடிப்பைப்பார்த்து லாரன்சே தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினாராம். அப்படியொரு மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறாராம் ரித்திகா சிங். அந்த வகையில், ஜோதிகா நடிக்க வேண்டிய வேடத்தை சிறப்பாகவே நடித்துள்ளாராம் ரித்திகா சிங். ஆக, கோலிவுட்டின் அடுத்த ஜோதிகா, ரித்திகா சிங்தான் என்று இப்போதே சிலர் பேசிக்கொள்கிறார்கள். இன்னும் சிலரோ, சிவலிங்கா வரட்டும் ஜோதிகா இடத்தை ரித்திகா சிங் பிடிப்பாரா? இல்லையா? என்பது பற்றி முடிவெடுக்கலாம் என்கிறார்கள்.