‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் தலைமையிலான புதிய அணியினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் அறிமுக கூட்டமும், பதவியேற்பு விழாவும் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு முன்னாள் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:
வெற்றி பெற்ற இளைஞர்களை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக தயாரிப்பாளர் சங்கத்தில் எதுவும் நடக்கவில்லை. நானும் தலைவராக இருந்தேன். எதையெல்லாமோ செய்து பார்த்தேன் முடியவில்லை. காரணம் தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்வது தயாரிப்பாளர்களுக்கே பிடிக்காது. நல்லவன் என்று பெயர் வாங்கிவிட்டால் அடுத்த முறையும் இவனே தலைவனாகி விடுவானோ என்று கணக்குப் போடுவார்கள். எனவே இப்போது வந்துள்ள நீங்கள் அடுத்த தேர்தலை போட்டியின்றி நடத்துகிற அளவிற்கு, நீதியரசர் இல்லாமல் நடத்துகிற அளவிற்கு பணிகளை செய்ய வேண்டும்.
இந்த தேர்தலில் நான் போட்டியிட்டேன். ரேஸ்ல எல்லாரும் ஓடுவோம். நான் ஜெயிச்சா என் பின்னாடி நீங்க வாங்க, நீங்க ஜெயிச்சா உங்க பின்னாடி நான் வர்றேன் என்று விஷாலிடம் சொன்னேன். இப்போது அவர் ஜெயித்திருக்கிறார் அவர் பின்னாடி நான் செல்வேன். இந்த தேர்தலில் நாங்கள் இரண்டு அணிகளாக பிரிந்து நின்றோம். ஒரு வேளை சேர்ந்து நின்றிருந்தால் நீங்கள் ஜெயித்திருக்க முடியாது.
எங்களை பிரித்து நிற்க வைத்தார் ஒருவர். முதலில் ஒன்றாக நிற்பது என்றுதான் முடிவு செய்தோம். குறுக்கே அவர் வந்தார். அவர் சகவாசம் வேண்டாம் என்று சொன்னேன். யாரும் கேட்கவில்லை. ஆனால் அவர் உள்ளே வந்து இரு அணிகளாக பிரித்தார். ஓட்டுக்களை சிதற வைத்தார். விஷாலை வெற்றி பெற வைத்தார். விஷால் அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லாமல் இருந்த விஷாலை போட்டியிட தூண்டியதும் அவர் தான். இந்த மாற்றங்களுக்கு காரணம் அவர் தான், அவருக்கு நீங்கள் எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும். இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.