போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழ் வருடப்பிறப்பிற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் அதற்கு ஒரு வாரம் முன்னதாக நாளை ஏப்ரல் 7ம் தேதி 5 படங்கள் வெளிவருகின்றன. “காற்று வெளியிடை, 8 தோட்டாக்கள், ஜுலியும் 4 பேரும், செஞ்சிட்டாளே என் காதல, விருத்தாச்சலம்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. மணிரத்னம் இயக்கியுள்ள 'காற்று வெளியிடை' படம் வருகிறது என்று தெரிந்தும் மற்ற படங்களை இயக்கியுள்ள புதிய இயக்குனர்கள் தைரியமாகப் போட்டி போடுகிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் - மணிரத்னம் கூட்டணி ஆரம்பமாகி 25 வருடங்கள் ஆன நிலையில் 'காற்று வெளியிடை' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. ஏற்கெனவே பாடல்கள் ஹிட்டாகியுள்ள நிலையில் படம் நல்ல வரவேற்பைப் பெறும் என வினியோக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
மற்ற புதுமுக இயக்குனர்களின் படங்களில் '8 தோட்டாக்கள்' படம் வித்தியாசமான ஒரு த்ரில்லர் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். “ஜுலியும் 4 பேரும், செஞ்சிட்டாளே என் காதல, விருத்தாச்சலம்” ஆகிய படங்கள் வெளிவந்த பின்தான் அப்படங்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது என்று தெரிய வரும்.
அடுத்த வாரம் தமிழ்ப் புத்தாண்டு அன்று 'சிவலிங்கா, ப.பாண்டி, கடம்பன்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.