போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
“எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, மான் கராத்தே, 10 எண்றதுக்குள்ள, அகிரா” ஆகிய படங்களைத் தயாரித்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தயாரித்து வரும் படம் 'ரங்கூன்'. அவருடைய உதவியாளரான ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இப்படத்தை 2014ம் ஆண்டு ஆரம்பித்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள். அனிருத் முதலில் இப்படத்திற்கு இசையமைக்கப் போவதாகச் சொன்னார்கள். அதன்பின் அவர் இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார். அவருக்குப் பதிலாக விக்ரம் என்ற புதிய முகம் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
கௌதம் கார்த்திக், சனா மக்பூல் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிவடைந்து தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. படத்தின் தயாரிப்பாளரான ஏ.ஆர்.முருகதாஸ் இன்று இப்படம் வெளியாகும் நாளை அறிவித்துள்ளார். அதன்படி ஜுன் 9ம் தேதி இப்படம் வெளியாகும் என்று சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
கௌதம் கார்த்திக் நடித்து இதுவரை எந்தப் படமும் பெரிய வரவேற்பையோ, வசூலையோ பெறவில்லை. இந்த 'ரங்கூன்' படம் அவருக்கு ஒரு வெற்றிகரமான ஆரம்பத்தை ஏற்படுத்தி வைக்கும் படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருக்கிறார்களாம்.