போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
நல்லதொரு குடும்பம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷார்மிளா. அதன் பிறகு கிழக்கே வரும் பாட்டு, ஒயிலாட்டம், தையல்காரன் உள்பட பல படங்களில் நடித்தார். தென்னிந்திய மொழிகளில் 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
வில்லன் நடிகர் ஆண்டனியை காதலித்து அவருடன் லிவ்விங் டூ கெதராக வாழ்ந்தார். பின்னர் அவரை விட்டுப் பிரிந்து சின்னத்திரை நடிகர் கிஷோர் சத்யாவை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவரையும் விவாகரத்து செய்து விட்டார். இந்த நிலையில் கிஷோரை நம்பி என் வாழ்க்கையை இழந்து விட்டேன். என்று சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு கிஷோர் அளித்துள்ள பதில் வருமாறு:
ஷார்மிளா மன அழுத்த நோயால் அவதிப்பட்டதால் அவருக்கு ஆறுதலாக ஒரு நண்பனாகத்தான் இருந்தேன். திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தியதால் தான் திருமணம் செய்து கொண்டேன். இருவரும் ஒரு நாள்கூட மனமொத்து வாழ்ந்ததில்லை. இதற்கிடையில் எனக்கு ஷார்ஜாவில் நல்ல வேலை கிடைத்ததால் அங்கு சென்று விட்டேன். அங்கும் வந்துவிட்டார். சரி புது ஊர், புது இடம், புது மனிதர்கள் ஆள் மாறியிருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அப்போதுதான் அவருக்கு குடி பழக்கமும், போதை பழக்கமும் இருந்தது தெரிய வந்ததது, இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரை விவாகரத்து செய்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மனைவி குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன். என்று கூறியுள்ளார் கிஷோர்.