இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்ட இளையராஜாவுக்கு தமிழ் சினிமா சார்பில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நிர்வாகிகள், இசைஞானி இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோவில் சந்தித்து பேசினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் விஷால் பேசியதாவது... ‛‛வாழ்க்கையிலேயே சந்தோஷமான நிகழ்வு இது. இளையராஜாவோடு நாங்கள் இருந்த அரை மணி நேரம் மேலும் ஒரு வருடம் நாங்கள் வேகமாக உழைக்க புதிய உத்வேகத்தை தந்துள்ளது. இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்தி சமர்ப்பணம் செய்ய உள்ளோம். இது சாதாரணமான பாராட்டு விழாவாக இருக்காது, இந்திய சினிமாவே நடத்தும் பாராட்டு விழாவாக, இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பாராட்டு விழாவாக இது இருக்கும்.
இந்த பாராட்டு விழா சென்னையில் தான் நடக்கும். சென்னையில் நடப்பது சென்னை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். ஏனென்றால் இளையராஜா நம் அனைவருடைய வாழ்விலும் இருக்கிறார். நாம் சிரிக்கின்ற போதிலும், நம்முடைய சோகத்திலும் அவருடைய பாடல்கள் தான் நமக்கு துணை. இதற்கான பணிகள் இன்று முதல் ஆரம்பமாகிறது. இது நிச்சயம் 1௦௦ பேர் கலந்து கொள்ளும் ஒரு பாராட்டு விழாவாக இருக்காது, பிரம்மாண்டமான விழாவாக இருக்கும் என்றார்.
வியாழன்று பதவியேற்பு விழா : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவியேற்பு விழா, வியாழன் அன்று மாலை 6மணி அளவில் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த அனைவரும் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும் என செயலாளர் பைவ்ஸ்டார் கதிரேசன் கேட்டு கொண்டார்.
இளையராஜா உடனான சந்திப்பின் போது விஷால் தவிர்த்து துணை தலைவர் பிரகாஷ்ராஜ், கௌரவ செயலாளர்கள் பைவ்ஸ்டார் கதிரேசன், ஞானவேல்ராஜா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பார்த்திபன், எம்.கபார் ஆகியோர் இருந்தனர்.