‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகர் திலகம் சிவாஜி அமெரிக்காவிற்கு அந்த நாட்டு விருந்தினராக சென்ற மாதிரி கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் தனது மனைவி டி.ஏ.மதுரத்துடன் ரஷ்யா சென்றார். இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் கலாச்சார பரிமாற்றத்துக்காக அப்போதைய பிரதமர் நேரு ஒரு கலைக்குழுவை ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்தார். அந்த குழுவில் தமிழ் நாட்டிலிருந்து என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், இயக்குனர் கே.சுப்பிரமணியம் ஆகியோர் சென்றனர்.
ரஷ்யாவின் பல இடங்களை சுற்றிப் பார்த்தனர். அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் என்.எஸ்.கிருஷ்ணன் பல குட்டிக் கதைகளை கூறினார். அதனை இயக்குனர் கே.சுப்பிரமணியம் மொழிபெயர்த்து கூறினார். இந்த கதைககள் ரஷ்ய மக்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. கதை கேட்க திரளாக மக்கள் கூடினார்கள். இதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ரஷ்ய அரசு, என்.எஸ்.கிருஷ்ணன் கதை கூறுவதையும் அதை மக்கள் ரசிப்பதையும் படமாக எடுத்தனர். ரஷ்யாவின் பல முக்கிய இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று கதை சொல்ல வைத்து அதனை படம்பிடித்தனர். சுற்றுப் பயணம் முடிந்து திரும்பும்போது அந்த படத்தின் ஒரு பிரதியை ரஷ்ய அரசாங்கம் வைத்துக் கொண்டு இன்னொரு பிரதியை என்.எஸ்.கிருஷ்ணனிடம் தங்கள் நாட்டு அன்பளிப்பாக கொடுத்தனர். சென்னை திரும்பிய அவர் அந்தப்ப படதத்தை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் ஒப்படைத்தார்.