குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? |
நயன்தாரா நடித்து வெளியாகிய வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ‛டோரா. இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் உருவாகும் படம் கொலையுதிர் காலம். கமலின் உன்னைப் போல் ஒருவன், அஜித்தின் பில்லா 2 படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இப்படத்தை இயக்குகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்தை இந்திப் பட தயாரிப்பாளர் வாசு பக்னானி தயாரிக்கிறார். இவர் இந்தியில் ஏராளமான படங்களைத் தயாரித்து இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, நான் தமிழுக்கு புதிதில்லை. தமிழில் வெளியான சின்ன மாப்பிள்ளை படத்தைப் பார்த்துதான் தயாரிப்பாளர் ஆனேன். அதை இந்தியில் கூலி நம்பர் 1 என்று ரீமேக் செய்தேன். படம் ஹிட்டானதால் தொடர்ந்து அங்கு படம் தயாரித்து வருகிறேன். கொலையுதிர் காலம் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோவாக ஜெர்மன் நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபுதேவா, தமன்னா நடிக்கிறார்கள். இந்தியில் நயன்தாரா ஏன் நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள். நயன்தாரா ரெடி என்றால் நான் அவரை இந்தியில் ஹீரோயினாக நடிக்க வைக்க தயார்தான். ஆனால் அவர் ரெடியில்லையே என்றார்.