‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'குட்டிப்புலி' படத்தை தொடர்ந்து இயக்குநர் முத்தையாவும், சசிகுமாரும் மீண்டும் இணைந்தது தெரிந்த விஷயம்தான். 'கொடிவீரன்' எனப் பெயரிட்டுள்ள அந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கி மதுரை, மேலூர் மற்றும் அதை சுற்றியுள்ள ஏரியாக்களில் நடைபெறுகிறது. இந்த படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார்.
முந்தைய படமான பலே வெள்ளையத்தேவா படத்தைவிட சற்று பெரிய பட்ஜெட்டில் இந்தப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் சசிகுமார். கொடி வீரன் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். கதையைக் கேட்ட அர்ஜுன் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டநிலையில், அந்த தகவல் வெளியே பரவியது.
வில்லனாக நடிக்கும் தகவல் வெளியே தெரிய வந்ததும் பலரும் அர்ஜுனுக்கு போன் செய்து கேட்க, அவருக்கு தர்மசங்கடமாகிவிட்டது. எனவே கொடிவீரன் படத்தில் வில்லனாக நடிக்கும் முடிவை மாற்றிக் கொண்டுவிட்டார். அதன் காரணமாகவே வில்லனாக நடிக்கவில்லை என்று தற்போது நடிகர் அர்ஜுன் மறுத்துள்ளார்.
தற்போது அர்ஜுன் ஒரு கன்னடப் படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் 'நிபுணன்' என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் வில்லனாக நடித்தால் நிபுணன் படத்தை ரிலீஸ் செய்யும்போது பிரச்சனை வரும் என்பதால்தான் கொடி வீரன் படத்தில் நடிக்கவில்லையாம்.