ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
லைக்கா நிறுவனம் இலங்கையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் ரஜினி கலந்து கொள்வதாக இருந்தார். தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததால் ரஜினி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார். ரஜினியின் இந்த முடிவு சாமர்த்தியமானது சூழ்நிலையை சிறப்பாக கையாண்டிருக்கிறார் ரஜினி என்று மாதவன் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
ரஜினி நடித்துள்ள படம் (2.ஓ) விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படம் மிக அதிக அளவில் முதலீடு செய்து தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போது எந்த சர்ச்சை எழுந்தாலும் அது படத்தை பாதிக்கும். படம் தாமதமானாலோ, தள்ளி வைக்கப்பட்டாலோ பலர் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக தயாரிப்பாளர் கடும் பாதிப்புக்கு உள்ளாவார். இதை தடுக்கவும், தவிர்க்கவும் ரஜினி சூழ்நிலையை சிறப்பாக கையாண்டிருக்கிறார். "மனிதாபிமான அடிப்படையில் நான் இலங்கை செல்லும்போது அதை அரசியலாக்க வேண்டாம்" என்று அவர் கூறியிருப்பது என்னை மிகவும் கவர்ந்தது.
ஒரு படம் வெளிவருதவற்கு முன் அதனையும் அதில் நடித்தவர்களையும் சமூக பிரச்சினைகளுடன் சம்பந்தப்படுத்துவது நியாயமற்றது. திரையில் நடிகன் முகத்தைத்தான் பார்க்கிறீர்கள். ஆனால் அதற்கு பின்னால் 500 குடும்பங்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. நடிகர்களுக்கு ஆடம்பரமாக வாழ ஆசையில்லை. நான் சாதரணமாக சைக்களில் சென்று வீட்டுக்கு காய்கறி வாங்கி வர ஆசைப்படுகிறேன். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமா என்பதை நினைத்து பார்க்க வேண்டும். என்றார் மாதவன்.