போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் |
நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா. இவர் தன் தந்தையுடன் இணைந்து ஊட்டியில் மெரிட் இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இந்த கல்லூரியில் படித்த உடுமலைபேட்டையைச் சேர்ந்த பிருத்விராஜ் என்ற மாணவர் கடந்த 2012ம் ஆண்டு ஊட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் "நான் மெரிட் இண்டர்நேஷனல் கல்லூரியில் படித்தேன். 4 ஆண்டுகள் படித்தால் 3 பட்டங்கள் கிடைக்கும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் கூறினர். படிப்பு முடிந்ததும் தபாலில் பட்டத்தை அனுப்பி வைத்தனர். அந்த பட்டத்தை கொண்டு விப்ரோ நிறுவனத்துக்கு இண்டர்வியூவிற்கு சென்றபோது அதனை அவர்கள் போலி பட்டம் என்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அண்ணா பல்கலை கழகம் சென்று விசாரித்தேன். அவர்களும் அதனை போலி பட்டம் என்பதை உறுதி செய்தனர். இதனால் எனக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் அளித்தார்.
கல்லூரியின் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் பட்டம் வழங்கியிருப்பதால் அது போலி பட்டமாகிவிட்டது என்பதால் கல்லூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகிகளான ஸ்ரீகாந்த் மனைவி வந்தனா, அவரது தந்தை சாரங்கபாணி ஆகியோருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை. கடைசியாக கைது வாரண்ட் பிறப்பிக்கும் சூழ்நிலை இருந்ததால் நேற்று வந்தனாவும், அவரது தந்தை சாரங்கபாணியும் ஊட்டி கோர்ட்டில் ஆஜராகினர். வழக்கை வருகிற ஏப்ரல் 18ந் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.