போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
விஜய் நடித்த கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்தபோது, அந்நிறுவனத்துக்கும், முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் தொழில்முறை ஒப்பந்தம் இருப்பதாக சொல்லி தமிழகத்திலுள்ள அரசியல் காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் கத்தி படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. அதையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு கத்தி படம் திரைக்கு வந்தது. மேலும், தொடர்ந்து தமிழில் படங்கள் தயாரித்து வரும் லைகா நிறுவனம், தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய்குமார் நடிக்கும் 2.ஓ படத்தை தயாரித்து வருகிறது.
இந்நிலையில், லைகா நிறுவனம் இலங்கையில் வீடு இல்லாத தமிழர்களுக்கு கட்டியுள்ள 150 வீடுகளை திறந்து வைக்க ரஜினியை இலங்கைக்கு அழைத்து செல்லயிருந்தது. ஆனால் வைகோ, திருமாவளவன், வேல்முருகன் போன்ற அரசியல் கட்சிகள் ரஜினி இலங்கைக்கு செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதைமீறி சென்றால் 2.ஓ படம் திரைக்கு வரும்போது தேவையில்லாத சலசலப்பை ஏற்படுத்துவார்கள் என்பதால் இலங்கை பயணத்தை ரத்து செய்வ தாக அறிவித்தார் ரஜினி.
ஆனால், ரஜினியின் இலங்கை பயணம் ரத்தானதால் அங்குள்ள தமிழர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எங்களை வைத்து தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகள் அரசியல் செய்கிறார்கள். எங்களுக்கு நல்லது நடப்பதே அவர்களுக்கு பிடிக்காது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ரஜினியை இலங்கைக்கு செல்ல விடாமல் தடுத்துள்ள தமிழக அரசியல் தலைவர்களுக்கும் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.