போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கையில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இது அங்குள்ள வாழும் தமிழர்களுக்கு ஒப்படைக்கப்பட இருக்கிறது. இதற்கான விழா ஏப்., 9-ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் சில அரசியல் கட்சியினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துவிட்டார் ரஜினி. மேலும், அரசியல் கட்சியினருக்கு இதுபோன்று இனி செய்யாதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
ரஜினி தன் இலங்கை பயணத்தை ரத்து செய்ததை சிலர் வரவேற்றும், சிலர் விமர்சித்தும் வருகின்றனர். இந்நிலையில், ரஜினியை தன் குருவாகவே கருதும் நடிகர் ராகவா லாரன்ஸ் இதுப்பற்றி தன் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் பணத்தாசை, பதவி ஆசை இல்லாதவர் ரஜினி, அவரை விமர்சிப்பது நியாயம் அல்ல என்று கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது...
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், தலைவர் ரஜினிகாந்த் குறித்த தங்கள் பார்வையை, ஆங்காங்கே பலரும் தெரிவித்து வருவதைக் காண முடிகிறது. நான், அவரது மிகப்பெரிய ரசிகன் மற்றும் தொண்டன் என்ற முறையில், ஏன் அவர் ஒரு என்னுடைய தன்னிகரில்லாத தலைவராக இருக்கிறார் என்று பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
பதவியாசை, பணத்தாசை இல்லாதவர்
பத்து பேர் பின்னால் இருந்தாலே, கட்சி ஆரம்பித்து, ஆட்சிக்கு வர ஆசைப்படும் இக்காலத்தில், கோடிக்கணக்கான உயிர் ரசிகர்கள் உடனிருந்தும், அரசியல் நாற்காலிக்கு ஆசைப்படாதவர்தான் என் தலைவர். இரண்டாவதாக, இத்தனை பெரிய ரசிகர்படை வைத்திருக்கும் என் தலைவர், மிக எளிதாக, ஆறு மாதத்திற்கு ஒரு படம் நடித்து வெளியிட்டு, மிகப்பெரும் பணம் சேர்க்கலாம். ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வது, அவர் பணத்தின் மேல் ஆசை இல்லாதவர் என்பதை நிரூபிக்கிறது.
எந்த ஆசையும், ஆணவமும் இல்லாதவர்
பிரதமர், நம் மாநில வருகையின் போது, அவர் சந்திக்க விரும்பிய, சந்தித்த ஒரே தலைவர் அநேகமாக சூப்பர் ஸ்டார் மட்டுமாகத்தான் இருக்கும். அவரது நன்மதிப்பும், போலித்தனமின்மையும் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்தியாவிலேயே, நட்சத்திர அந்தஸ்தின் உச்சத்தில் இருந்து வரும் போதும், நாட்டிலேயே மிகப்பிரபலமான நடிகராக இருக்கும் போதும், எந்தவிதமான ஆசையும், ஆணவமும் இல்லாமல், ஆன்மீக வழியைத் தேர்ந்தெடுத்து, பயணம் செய்பவர் அவர்.
இவை, தலைவரை மதித்து வணங்கும் என் ஒருவனின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல. கோடிக்கணக்கான மக்கள் அவரை நேசிப்பதற்கு காரணமும் இதுதான். சிலர், தலைவரைக் குறித்து தவறாக பேச நினைக்கலாம். ஆனால், அவரை நன்கு அறிந்தவர்கள், அவரை மதித்து வணங்குவார்கள். அந்த கோடிக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.