'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை |
பாடல் காப்பி ரைட்ஸ் விசயமாக இளையராஜா எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கிடையே அதிருப்திகரமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆனால் இதுபற்றி அவர்கள் காலத்து பாடலாசிரியர்களில் ஒருவரான வைரமுத்து இப்போதுவரை எந்தவித கருத்தும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார். அவரது மகனான மதன்கார்க்கி மட்டும் இளையராஜா கருத்துக்கு வரவேற்பு கொடுத்தார். அதேசமயம், இளையராஜாவே இருந்தாலும் அவர் இசையமைத்த பாடல்களை மேடையில் பாட வேண்டுமென்றாலும் சம்பந்தப்பட்ட பாடலாசிரியர், தயாரிப்பாளர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றொரு கருத்தினையும் பதிவு செய்தார்.
ஆனால், இந்த நேரத்தில், கோலிவுட்டின் பிரபல பாடலாசிரியர்களிடம் இந்த காப்பி ரைட்ஸ் குறித்து கருத்து கேட்டால், அதுபற்றி நாங்கள் எதுவும் சொல்ல இயலாது. எங்களுக்கெல்லாம் சீனியர் கவிஞர் வைரமுத்துதான். அதனால் அவர் அதுகுறித்து என்ன பதில் சொல்கிறார் என்பதை பொறுத்துதான் நாங்கள் பதிலளிக்க முடியும். அவருக்காகத்தான் நாங்கள் காத்திருக்கிறோம் என்கிறார்கள். மேலும், இளையராஜாவுக்கு நெருக்கமான சில பாடலாசிரியர்களோ, இளையராஜாவுக்கு யாரும் கருத்து சொல்வது பிடிக்காது. அதுவும் இந்த மாதிரி சூழலில் சொன்னால் கோபித்துக்கொள்வார் என்று வாய் திறக்கவே பயப்படுகிறார்கள்.