தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
அவ்வப்போது ஏதேனும் கருத்துக்களை டுவிட் செய்து சர்ச்சையில் சிக்கிக்கொண்டு வருபவர் பாடகி சின்மயி. பாடகி சுசித்ராவும் இவரை சர்ச்சையில் சிக்க வைத்தார். இந்த நேரத்தில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்பவர்கள் மீன்களை கொல்கிறார்கள். அதனால் அவர்களை கொல்வதில் எந்த தவறும் இல்லை என்று சின்மயி சொன்னதாக ஒரு சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால், அப்படி நான் சொன்னதே இல்லை. யாரோ என்னை பிரச்சினையில் சிக்க வைக்க எனது பெயரில் பதிவு செய்து இப்படி கோர்த்து விட்டுள்ளனர் என்று மறுப்பு தெரிவித்துள்ளார் சின்மயி. மேலும் நான் ஏதேனும் கருத்துக்களை பதிவிட்டால் அதற்கு தங்களது கருத்துக்களை பதிவிடுவதை விட்டு விட்டு, உன்னை ரேப் பண்ணி விடுவேன் என்றெல்லாம் சிலர் பதிவிடுகிறார்கள். இது எனக்கு பெரிய மனவேதனையை கொடுக்கிறது என்று ஒரு நேரலை வீடியோவில் தெரிவித்துள்ளார் சின்மயி.