‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்தப் படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை இதுவரை அறிவிக்காமல் சஸ்பென்சாகவே வைத்திருக்கிறார்கள். ஏற்கெனவே இப்படத்தில் இடம் பெற்ற பாடலான 'மறு வார்த்தை' பாடலை வெளியிட்டார்கள். அந்தப் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அடுத்து நாளை மறு நாள் 25ம் தேதி அடுத்த சிங்கிள் பாடலான 'நான் பிழைப்பேனோ..' என்ற பாடலை வெளியிட உள்ளார்கள். இந்தப் பாடலை 'மிஸ்டர் எக்ஸ்' வெளியிட உள்ளதாக கௌதம் மேனன் அறிவித்துள்ளார். அந்த 'மிஸ்டர் எக்ஸ்' யார் என்பது அன்று தெரிய வரும். அந்த மிஸ்டர் எக்ஸுக்காக சில தினங்களுக்கு முன்பு ஃபேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றில் கூட தனியாக ஒரு கணக்கை ஆரம்பித்துள்ளார்கள்.
அந்த 'மிஸ்டர் எக்ஸ்' என்பவர் இசையமைப்பாளர் தர்புகா சிவா தான் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். சசிகுமார் நடித்த 'கிடாரி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தர்புகா சிவா அடுத்து 'பலே வெள்ளையத் தேவா' படத்திற்கும் இசையமைத்தார்.
25ம் தேதியாவது அந்த 'மிஸ்டர் எக்ஸ்' என்பவர் தர்புகா சிவா தான் என அறிவிப்பார்களா அல்லது அதன் பின்னும் சஸ்பென்ஸ் வைப்பார்களா ?. கௌதம் மேனனின் படங்கள் வெளிவருவதுதான் சஸ்பென்ஸ் என்று பார்த்தால், இதிலும் ஒரு சஸ்பென்ஸ்.