‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ் சினிமாவில் 30 வயதில் உள்ள நடிகர்களில் போட்டியாளர்களாகக் கருதப்படுபவர்கள் சிம்புவும், தனுஷும் தான். அஜித், விஜய்க்குப் பிறகு இவர்களுக்கிடையேதான் போட்டி என்ற ஒரு நிலை இருந்தது. ஆனால், அதன் பின் அது அப்படியே மாறிவிட்டது. இருந்தாலும் சிம்பு, தனுஷ் இருவருக்கும் இருக்கும் திறமைகள் மற்ற ஹீரோக்களிடம் இருப்பதை விட கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. குறைந்த வயதிலேயே இருவரும் இயக்குனர்களாகவும் மாறியவர்கள்.
தனுஷ் இயக்குனராக அறிமுகமாக உள்ள 'ப.பாண்டி' படத்தில் ராஜ்கிரண் தாத்தா கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கிறார். சிம்பு தற்போது நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் அஷ்வின் தாத்தா என்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆக, இந்த இரண்டு படங்களிலும் தாத்தா கதாபாத்திரம் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே அமைந்துள்ளது.
'ப.பாண்டி' படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரைக்கு வருகிறது. 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் எப்போது திரைக்கு வரும் என்று தெரியவில்லை. இருந்தாலும் இந்த இரண்டு படங்களிலும் உள்ள தாத்தாக்களில் 'பாண்டி தாத்தா' பெயர் வாங்கப் போகிறாரா அல்லது 'அஷ்வின் தாத்தா' பெயர் வாங்கப் போகிறாரா என்பதுதான் கேள்வியே.