‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விதார்த் ஒரு புடம் போடப்பட்ட நடிகன். எந்த படமாக இருந்தாலும் அதை அனுபவிச்சி பண்ணக்கூடிய நடிகர் என்று ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் டிரெய்லர் விழாவில் நடிகர் சங்கத்தலைவர் நாசர் வாழ்த்திப்பேசினார்.
மேலும், எங்கிருந்து அவருடைய நடிப்புக்கான தேடல் ஆரம்பிக்கிறாருன்னு எனக்கு தெரியும். அவர் வெயிட் பண்ணனும். அவர் ஒரு புடம் போடப்பட்ட ஒரு நடிகன் என்று நான் உத்தரவாதம் தருவேன். வெறும் நடிகனாக கனவு காண்பது மட்டுமல்ல, நடிகராக தன்னை தயார்படுத்திக் கொள்வதுதான் ஒரு நடி கனின் முதல் தேடலாக உள்ளது. அந்த தேடல் விதார்த்திடம் உள்ளது.
ஒரு படத்தில் பார்க்கிறேன். ஒரு மூலையில் நிற்கிறான். என்னப்பா என்று கேட்டால், சின்ன வேடம்தான் ஆனா நல்ல வேடம் சார் என்கிறார். நாடக நடிகனுக்கு மட்டும்தான் ஒரு நிகழ்வின் வெற்றியையும் தோல்வியையும் சமமாக பார்க்கின்ற பக்குவம் இருக்கும். விதார்த்தின் உழைப்புக்காக இந்த படம் ஓடும். ஆட்டக்கார அலமேலு, அதுதான் ஒருகாலத்தில் மிகப்பெரிய படம். அன்றைக்கு ஆடுதான் பெரிய படமாச்சு. அதேபோல் இந்த ஒரு கிடாயின் கருணை மனு படமும் மனசுக்கு நெருக்கமான படம். அதை விட பெரிய வெற்றியடைய வேண்டும் என்றார் நாசர்.