‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
எஸ்.எஸ். ராஜமௌலியின் 'பாகுபலி-2' ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கிவிட்டதால் இப்படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 'பாகுபலி-2' படத்தின் தமிழக விநியோக உரிமையை சில மாதங்களுக்கு முன்னதாக 'ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ்' பெரிய விலை கொடுத்து வாங்கியது.
இந்நிலையில், இப்படத்தின் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியா விநியோக உரிமையை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு தற்போது மிகப் பெரிய ஒரு தொகைக்கு விற்றுள்ளது ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ். பாகுபலி முதல் பாகத்தை வாங்கிய ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா கடைசி நேரத்தில் 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' நிறுவனத்துக்கு விற்றார். 'பாகுபலி' முதல் பாகத்தை தமிழகம் முழுக்க வெளியிட்டு வசூல் அள்ளியது 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்'.
தற்போது 'பாகுபலி-2' படத்தையும் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' வெளியிடவிருக்கிறது. அதைப்போல 'பாகுபலி-2' படத்தின் வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு ஏரியா விநியோக உரிமையை 'ஃபைவ் ஸ்டார்' நிறுவனத்தை சேர்ந்த செந்திலுக்கு விற்கப்பட்டிருக்கிறது.