இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
சரித்திர வெற்றியை பதிவு செய்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது திரையிடுவதற்கு தயாராகி வருகின்றது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த பாகுபலி எனும் வரலாற்று திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளிவந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் வெற்றி வாகை சூடியது. பாகுபலி வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்து உருவாக்கியிருக்கும் பாகுபலி-2 படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் VFX பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாகுபலி-2 படத்தின் டிரைலர் மார்ச் 15ல் மும்பையில் வெளியிடப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. பலமுறை பாகுபலி படத்தின் திரையிடும் தேதி மாற்றப்பட்டு, பின்னர் டிரைலர் வெளியிட்ட ஒரு மாதத்தில் பாகுபலி வெளிவந்தது. இதே போல் இல்லாமல் பாகுபலி-2 படத்தின் டிரைலர் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே அறிவித்தபடி வரும் ஏப்ரல் 28ல் இப்படம் திரைக்கு வரும் என்று ரசிகர்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.