‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பவர்ஸ்டார் என்று தனக்குதானே பட்டம் சூட்டிக்கொண்ட நடிகர், டாக்டர்.சீனிவாசன், டில்லி போலீசாரால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
டாக்டரான சீனிவாசன், ‛லத்திகா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப்படம் வெளியானதே தெரியவில்லை, ஆனால் படம் 100 நாட்கள் ஓடியதாக அவரே விளம்பரப்படுத்தி, தனக்கு தானே பவர்ஸ்டார் என்று பட்டம் எல்லாம் சூட்டிக் கொண்டு சினி மார்க்கெட்டில் தன்னை நிறுத்தி கொண்டார். தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வருகிறார் சீனிவாசன்.
இந்நிலையில் ரூ.10 கோடி மோசடி செய்ததாக சீனிவாசன் மீது டில்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அவரை பல முறை ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஒருமுறை கூட நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு கைது வாரண்ட் பிறபிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் டில்லி போலீசார் சென்னை வந்து, அண்ணாநகரில் வசித்து வந்த சீனிவாசனை இன்று(மார்ச் 7) கைது செய்தனர்.
சீனிவாசன் மீது ஏற்கனவே ஏகப்பட்ட மோசடி வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக அவர் 3 மாதம் சிறைவாசம் எல்லாம் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.