‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ்த் திரையுலகத்தையும், வசூல் விவரங்களையும் பிரிக்கவே முடியாது. ஒரு படம் வெளிவந்த இரவே படம் வெற்றி என்று தயாரிப்பாளர்களும், நடிகர்களும் கொண்டாடுவதைப் பற்றி பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கடந்த வாரம் கருத்து தெரிவித்திருந்தார். 'கபாலி' உட்பட 7 பெரிய படங்கள் நஷ்டத்தைத்தான் கொடுத்தன என்றும் கூறியிருந்தார். அதற்கு சில 'கபாலி' வினியோகஸ்தர்களும் படம் தங்களுக்கு லாபம்தான் கொடுத்தது என்று கருத்து தெரிவித்தினர்.
இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் கருத்தின் தொடர்ச்சியாக மேலும் சில விஷயங்களை திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். படம் வெளிவந்த உடனேயே, தவறான வசூல் விவரங்களைக் கொடுப்பதை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்த வேண்டும். அப்படியில்லை என்றால் மாதா மாதம் கூடும் வினியோகஸ்தர்கள் கூட்டத்தில் ஒவ்வொரு படத்தையும் வாங்கிய விலை என்ன ?, அவை வசூலித்தத் தொகை என்ன ? போன்ற விவரங்களை வெளியிடுவோம் என அவர் கூறியிருக்கிறார்.
முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்குத்தான் 100 கோடி வசூல் என்று சொல்வது கடந்த சில வருடங்களாக ஃபேஷன் ஆக ஆகிவிட்டது. ஆனால், உண்மையிலேயே எத்தனை படங்கள் 100 கோடியைத் தொட்டன என்பது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கே தெரியும் என பெயரிட விரும்பாத திரையுலகப் பிரமுகர் ஒருவர் தெரிவிக்கிறார்.
இந்த வசூல் விவகாரம் இப்போதைக்கு ஓயாது என்றே தெரிகிறது.