‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சில நாட்களுக்கு முன் சிலரால் திட்டமிட்டு கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளாகி தப்பித்த நடிகை பாவனா, தைரியமாக குற்றவாளிகளை சுட்டிக்காட்டி அவர்களை சட்டத்தின் பிடியில் சிக்கவைக்கும் போராட்டத்திலும் இறங்கினார்.. நேர்ந்த துன்பத்தை கண்டு வெளியில் சொல்ல பயந்து வீட்டில் ஒடுங்கும் சராசரி பெண்ணாக இல்லாமல், போராட்ட குணத்தை வெளிப்படுத்திய பாவனாவின் இந்த துணிச்சலான முடிவை அனைவரும் பாராட்டினர். ஆனால் அதே சமயம் இனி என்னால் எப்படி நடிக்க முடியும்.. நடிப்பை விட்டே விலக முடிவெடுத்திருக்கிறேன் என்றும், குற்றவாளிகளை சட்டம் தண்டிக்கும் வரை நடிக்க மாட்டேன் என்று பாவனா சொன்னதாக தகவல்கள் வெளியாகின..
பாவனாவின் இந்த முடிவை கேட்ட பலரும் வருத்தப்பட்டதுடன், பாவனா தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு முன்புபோல நடிக்க வேண்டும் என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக பாவனா அடுத்து நடிக்க இருந்த 'ஆடம்' படத்தின் ஹீரோவும் பாவனாவின் நெருங்கிய நண்பருமான பிருத்விராஜ் பாவனாவுக்கு தைரியமளித்து, அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டி, அவர் மீண்டும் நடிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதுதான் உன்னை அவமதிக்க நினைத்தவர்களுக்கு தரும் பதிலடியாக இருக்கும் என அவர் பாவனாவுக்கு ஆலோசனையும் வழங்கினாராம்.