இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
ரஜினிகாந்தைப் போன்று ராகவேந்திரா சாமிகள் மீது பற்று கொண்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அதனால் சென்னை ஆவடியில் ஒரு ராகவேந்திரா கோயில் கட்டி அதை நிர்வகித்து வருகிறார். அதேபோல் தனது அம்மா கண்மணி மீதும் அதிக பாசம் கொண்டவரான லாரன்ஸ், அம்மாவுக்காக ஒரு கோயில் கட்டியிருக்கிறார். அதில் வைக்கப்பட்டுள்ள தனது அம்மாவின் சிலையை ராஜஸ்தானில் வடிக்கப்பட்டு கொண்டு வந்தார்.
மேலும், சென்னை பூந்தமல்லியில் கட்டப்பட்டு வந்த அந்த அம்மா கோயில் கட்டும் பணிகள் தற்போது முடிவடைந்து விட்டது. அதனால் விரைவில் கோயிலை திறக்கப்போகிறாராம் லாரன்ஸ். அந்த அம்மா கோயிலை தனது ஆன்மீக குருவான நடிகர் ரஜினியை வைத்து திறக்க அவர் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.