போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
2010-ல் 'சிங்கம்', 2013-ல் 'சிங்கம் 2', 2017-ல் 'சி 3' என 'சிங்கம்' படத்தை ஒரு தொடர் படைப்பாக இயக்குனர் ஹரி, சூர்யா கூட்டணி கொடுத்து வருகிறது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வெளிவந்த 'சி 3' படமும் எதிர்பார்த்ததைப் போலவே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து விட்டது என தயாரிப்பு நிறுவனமே அறிவித்துள்ளது. கடந்த வாரம் 17ம் தேதி சில புதிய படங்கள் வந்தாலும் நேற்றும், அதற்கு முந்தின நாளும் விடுமுறை தினங்கள் என்பதால் 'சி 3' வசூல் நன்றாக இருந்ததாகவே தெரிவிக்கிறார்கள்.
ஹரி, சூர்யா இருவரும் 'சிங்கம்' படத் தொடரின் 4வது பாகத்தை எப்போது கொடுப்பார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கடந்த வாரம் தெலுங்கில் இப்படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாடிய போது அது பற்றிய தகவலை இயக்குனர் ஹரி வெளியிட்டுள்ளார்.
“இன்னும் 5 அல்லது 6 ஆண்டுகள் கழித்தே 'சிங்கம்' படத்தின் நான்காவது பாகத்தை எடுக்க உள்ளோம். அடுத்து விக்ரம் நடிக்கும் 'சாமி' படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க உள்ளேன். அந்தப் படத்தை முடித்ததும் மீண்டும் சூர்யா நடிக்க உள்ள ஒரு படத்தை இயக்க உள்ளேன். அந்தப் படத்தில் சூர்யாவுக்கான கதாபாத்திரமும், படமும் மிகவும் வித்தியாசமாக இருக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை வந்த போலீஸ் படங்களின் கதாபாத்திரங்களில் 'தங்கப் பதக்கம்' சௌத்ரியும், 'மூன்று முகம்' அலெக்ஸ் பாண்டியன் ஆகியவைதான் அதிகம் பேசப்பட்டு வந்தன. அவற்றையெல்லாம் 'சிங்கம்' படத்தின் துரைசிங்கம் முறியடித்துவிட்டார்.