போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
நடிகர் கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவு வன்முறையை தூண்டுவதாக கூறி இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் அவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் பரபரப்பு தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தனது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறர். அதிலும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்த அன்று, ‛‛மக்கள் தங்களின் தொகுதி எம்எல்ஏ.க்களை தகுந்த மரியாதையுடன் வரவேற்பு கொடுங்கள், உங்களின் மன உளைச்சலை கவர்னருக்கு இ-மெயில் அனுப்புங்கள்'' என்று கவர்னரின் இ-மெயில் முகவரியையும் பதிவிட்டிருந்தார்.
கமலின் இந்த பதிவு அதிமுக., அரசுக்கு எதிரான வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக கூறி இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் கமல்ஹாசன் மீது சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கமல்ஹாசனின் டுவிட்டர் கருத்து எம்.எல்.ஏக்களுக்கு எதிராக மக்களை வன்முறைக்கு தூண்டும் விதமாக உள்ளது. வன்முறையை தூண்டும் விதத்தில் சமூக வலைதளத்தில் கருத்தினை பதிவிட்ட அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.