ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
நம் மன உளைச்சலை கவர்னருக்கு இ-மெயில் மூலம் தெரிவியுங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசியல் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வரும் கமல்ஹாசன், சசிகலா அணியினர் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தீர்க்கமாக உள்ளார், அதேசமயம் பன்னீர் செல்வம் ஆட்சியை தொடரலாம் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன்னர் கூட, ‛‛இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா, அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்'' என்று கமல் கூறியிருந்தார்.
இந்நிலையில், சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 122 எம்எல்ஏ.,க்கள், ஆதரவு, 11 எம்எல்ஏ.,க்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே கமல் தனது டுவிட்டர் பதிவில், "தமிழக மக்களே, உங்கள், உங்கள் தொகுதிகளின் எம்.எல்.ஏக்களுக்கு அவர்கள் பெற தகுதியான மரியாதையை அளித்து வரவேற்பு கொடுங்கள்" என கூறியுள்ளார்.
மற்றொரு டுவிட்டரில் கவர்னருக்கு இ-மெயில் அனுப்புங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், ‛‛ Rajbhavantamilnadu@gmail.com - ங்கற விலாசத்துக்கு நம் மன உளைச்சலை மின் அஞ்சலா அனுப்புங்க. மரியாதையா பேசணும், அது அசம்பளியில்ல கவர்னர் வீடு'' என்று பதவிட்டிருக்கிறார்.