போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
இந்திய அளவில் அதிக தொகையை வசூல் செய்த தென்னிந்திய சினிமா 'பாகுபலி' படம்தான். பாகுபலி படத்தின் முதல் பாகத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பரபரப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் முடிவடைந்தது.
தற்போது பாகுபலி படத்தின் முக்கிய பணியான கிராபிக்ஸ் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம் எடிட்டிங்,ட ப்பிங் போன்ற போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தற்போதைய சூழலில் பாகுபலி-2 படத்தை ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். முதல் பாகத்தின் வெளியீட்டு தேதியில் குழப்பம் ஏற்பட்டதைப்போல் இந்தமுறை ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.
இந்நிலையில், ராஜமௌலி அடுத்ததாக இயக்கும் படம் எது? அதன் கதாநாயகர்கள் யார் யார்? என இப்போதே ஆளாளுக்கு தகவல் சொல்லத் துவங்கிவிட்டனர். உண்மை நிலவரம் என்ன? அடுத்த புராஜெக்ட் பற்றி இரண்டு திட்டங்கள் வைத்திருக்கிறாராம் ராஜமௌலி.
ஒன்று, மகாபாரதம் கதையை பிரம்மாண்டமான திரைப்படமாக எடுப்பது. இப்படத்தில் மோகன்லால், அமீர்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட இந்திய சூப்பர்ஸ்டார்கள் அனைவரையும் ஒன்றிணைத்து நடிக்க வைப்பது என்று திட்டமிட்டிருக்கிறாராம்.