போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் நேற்று ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சமாதியிலும் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
முதன் முறையாக மறைந்த முதல்வர் சமாதிக்கு சென்றேன். தியானிக்க அல்ல. ஜீரணிக்க! மரணத்தின் மர்மம், மூன்றெழுத்துக்காரரின் 75 நாள் மவுனத்தின் மாமர்மம், அரசியல் அதர்மங்கள், ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்கள், ரிமோட்டாய் கோடிகள், நடப்பவை நடந்தவை. விளங்காமல் கலங்கரை விளக்கத்தில் இருந்து நடந்து சென்றேன். கட்சிகளின் கல்மிஷங்கள் இல்லாத எம்.ஜி.ஆரின் விசுவாசிகள், அ.தி.மு.க. தொண்டர்கள், அறியா பொது ஜனங்கள் அணையா தீபங்களாய் அங்கே ஒளியூட்டல்.
'அம்மா' என்றழைக்கப்பட்டவரின் ஆன்மா என்ன நினைக்கும்? எனக்கும், அவருக்குமான சில சந்திப்புகளும், சம்பாஷனைகளும் வந்து போயின நினைவில். நம்பிக்கை துரோகமும், துரோகிகளின் நம்பிக்கையும் எதுவுமே சகிக்கவில்லை. சசிகலாவோ, ஓ.பி.எஸ்.சோ ஆட்சியமைப்பது சட்டபூர்வமே. ஆகையால் சட்டு புட்டுன்னு சட்டசபைக்கு வந்து மக்கள் பணி பாருங்கள். எம்மக்கள் திருந்தி விட்டார்கள். மறுதேர்தலை சந்திக்க வாருங்கள். நோட்டுக்காக அல்ல. நாட்டுக்காகவே ஓட்டு. இவ்வாறு பார்த்திபன் எழுதியிருக்கிறார்.